தமிழகம்

2022 மே மாதம் பொதுத் தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழகத்தில் 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 2022 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

Bid to overcome dearth, non-teaching staff to be promoted as teachers by  govt - DTNext.in

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த நடக்கவில்லை. இணையவெளி மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டன.

கொரோனா தொற்று குறைந்ததால் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கடந்த செப்டம்பர் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந் தேதியும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

தற்போது தீபாவளி விடுமுறையைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ  இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை
Maalaimalar News: education Department Notice tamilnadu school 6 on open

தற்போதைய கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை 2022 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மாதங்களில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் முடிக்கப்போதுமான கால அவகாசம் இல்லாத சூழல் உள்ளது. .

ALSO READ  பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை

எனவே பொது தேர்வுகளை 2 மாதங்கள் தள்ளிவைத்து 2022 ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு….

naveen santhakumar

சென்னை – திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரெயில் இயக்கம்..

Shanthi

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor