தமிழகம்

ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு; தமிழக அரசு அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஜனவரி 19- ஆம் தேதி முதல் 10, 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

இது தொடர்பாக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கோரியதால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறினார். மேலும் அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  கொரோனா எதிரொலி; ரிலீஸில் தள்ளிப்போகும் கே.ஜி.எஃப் 2 !

#tamilnadu #tamilnadugovt #tnschool #schoolreopen #edapadipalanisamy #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மா உணவக பணியாளருக்கு கொரோனா….

naveen santhakumar

ஆசிரியர்களுக்கு செக் : செங்கோட்டையன்…

naveen santhakumar

தமிழகம் வந்த ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.. இதில் என்ன ஸ்பெஷல்…?

naveen santhakumar