தமிழகம்

அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டா முதல்வர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு  செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. 

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அதனையடுத்து மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் குடியரசு தலைவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசு தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர்.

ALSO READ  "ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது"- ரஷிய அதிபர் புதின்..

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

News Editor

திமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல்?

Shanthi

பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்..

Shanthi