தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழக அரசு கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது 58 ஆக இருந்ததை 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என தகவல் வெளியாகியுள்ளது
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.