தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழா சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு கோரிக்கைகள், இடஒதுக்கீடு , விவசாயிகள் பயிர்க்கடன், தங்க நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ”மீண்டும் உயிருடன் வருவேனா என்றிருந்த நிலையில் போராடி மறுபிறவி எடுத்துவந்துள்ளேன். முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறேன்” என கண்ணீர் மல்க பேசினார். அண்மையில் அமைச்சர் காமராஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.