தமிழகம்

தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது; ஓ.எஸ் மானியம் பேட்டி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாவிற்கு உட்பட்ட 581 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை நாகை மற்றும் நாகூரில் நடைபெற்ற விழாக்களில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். பயனாளிகளுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

ALSO READ  ஸ்டெர்லைட் ஆலை திறப்பை  எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஒ.எஸ்.மணியன், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்ப்போம். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. அவரை மத்திய அரசு நியமித்துள்ளது. அவரது செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து- ஆணையர் எச்சரிக்கை…!

naveen santhakumar

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் பதவியேற்பு எப்போது?

News Editor

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – உங்க ஊர் லிஸ்டுல இருக்கா?

naveen santhakumar