தமிழகம்

தமிழகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஒருவருக்கு மரபியல் மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று  கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் இருந்து வந்த இந்தியர்களில் 6 பேருக்கு மரபியல் மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்று  உறுதியானதாகவும், அவர்கள் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகரிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், கொரோனா உறுதியான நபர்களின் மாதிரிகளை புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியிருந்தது. 

ALSO READ  பஸ் டிக்கெட் ரேட் கேட்டது ஒரு குத்தமா? திருச்சியில் பயணிக்கு நேர்ந்த சோகம்.

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா உறுதிச் செய்யப்பட்ட நபருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு புதிய வகை  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 30 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில் 17 பேரின் மாதிரிகளில் 16 பேரின் முடிவுகள் வரவில்லை. புதியவகை கொரோனா தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபப்ட்டுள்ளது. அதேபோல், இந்த நபருடன் விமானத்தில் வந்த 15 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, இதில் யாருக்கும்  கொரோனா இல்லை” என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 49 பேர் இடமாற்றம்.- தமிழக அரசு உத்தரவு..!

naveen santhakumar

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை ஆணை திறப்பு!

News Editor

நல்லா புரிஞ்சிக்கோங்க மக்களே…..’எந்த மாமியும் நம்ம மாமி இல்ல’…..பிரசன்னா

naveen santhakumar