தமிழகத்தில் நாளை முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் அணைக்கட்டில், தமிழக அரசு சார்பில் காளிங்கராயன் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேசி கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். மேலும், 30 லட்சம் வைட்டமின் மாத்திரைகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.