தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் 24 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என அரசு கூறியுள்ளது.
மேலும் மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிகை உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணிவரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை என்ற செய்தி மதுபிரியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.