தமிழகம்

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிட்டது. இதனால் தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில்,

கொரோனா வைரஸ் நோய் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ  பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - 8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணாக்கர் சேர்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை அந்தந்த ஆட்சித் தலைவர்களிடம் கோரி நடைமுறைப்படுத்தவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ALSO READ  ஏப்.5 இல் மின்விளக்குகளை மட்டும் அணையுங்கள்.. மின்சார வாரியம் வேண்டுகோள்.. ஏன் தெரியுமா?

கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் போலி தடுப்பூசிகள் இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

News Editor

கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !

News Editor

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு- இல்லத்தரசிகள் அதிருப்தி…!

naveen santhakumar