தமிழகம்

பலே கில்லாடி…ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கள்ளக்குறிச்சி:

ஒரே மாதத்தில் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் (22) என்பவரும் அவர் வீட்டின் அருகே வசிக்கும் நர்மதா என்ற பெண்ணும் காதலித்தனர். அதில் நர்மதா கர்பமானதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசனிடம் வற்புறுத்தியுள்ளார்.

ALSO READ  All Pass: அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு- தமிழக அரசு …!

இந்நிலையில் பூவரசன் தலைமறைவானதால் நர்மதா காவல்துறையில் புகார் அளித்தார். பூவரசனை கண்டறிந்த போலீசார் நர்மதாவுடன் திருமணம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பினர்.

இந்நிலையில் ஒரு நாள் பூவரசனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.அதில் எதிர்முனையில் பூவரசனின் காதலி தீபிகா பேசுவதாக ஒரு பெண் கூறினார். அப்போதுதான் பூவரசன் இருவரையும் ஏமாற்றியது நர்மதாவுக்கு தெரியவந்தது.

ALSO READ  ஜனவரியில் விடுதலையாகிறாரா சசிகலா?????

வீட்டை விட்டு வெளியேறிய பூவரசன் தீபிகாவை திருமணம் செய்து கொண்டார். தீபிகாவை அழைத்து பேசிய காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பூவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் IAS நியமனம்…

naveen santhakumar

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி !

News Editor

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி:

naveen santhakumar