தமிழகம்

காக்கி-கரண்ட் இடையே மோதல்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மின் வாரிய ஊழியர்களின் பைக்கை பறிமுதல் செய்த காவல் நிலையத்திற்கு மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிப்புத்தூர் கூமாப்பட்டி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரது பைக்கை சோதனை செய்துள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததற்காகவும், ஒரே பைக்கில் மூவர் வந்ததற்காகவும் அவரது பைக்கை சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார் .

இதுகுறித்து மின்வாரிய ஊழியர் சைமன், உதவி பொறியாளர் கோபால் சாமியிடம் புகார் அளித்துள்ளார். காவலர்களின் இந்த செயலுக்கு பழி வாங்க எண்ணிய மின்வாரிய ஊழியர்கள் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மின்சார இணைப்பை 2 மணி நேரம் துண்டித்து வைத்துள்ளனர்.

ALSO READ  டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கடும் மோதல்-பலர் காயம் :

இதுகுறித்து கூமாப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீஸார், மின்வாரியத்தினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டிலேயே முதல்முறையாக இரவு நேர ஆதார் சேவை மையம்…..

naveen santhakumar

காமராஜர் திறந்து வைத்த கிருஷ்ணகிரி அணை.. சுவாரசியமான வரலாறு…..

naveen santhakumar

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… உதயநிதி கொடுத்த கார் பரிசு யாருக்கு?

naveen santhakumar