தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கரூர் நகரில் பல்வேறு இடங்களில் காலை முதல் சுட்டெரித்த வெயில் மதியம் பரவலாக ஆங்காங்கே மழை – பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயிலின் கோர தாண்டவம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டியது. ஒரு மணி அளவில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. கரூர் பேருந்து நிலையம், ஜவகர் பஜார், வெங்கமேடு, காந்திகிராமம், திருமாநிலையூர், லைட் ஹவுஸ் கார்னர், பைபாஸ் சாலை, வடிவேல் நகர், வேலுச்சாமி புரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இந்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.