தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ், உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நூற்றுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை மறித்து அவர்களிடம் எங்கு செல்கிறேன் என்று போலீசார் கேட்டறிந்தனர்.
மருத்துவமனை மற்றும் மருந்துகள் ஸ்கேன் எடுப்பவர்களை மட்டும் அனுப்பிவிட்டு சுமார் 50 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் அவர்களை தேவையின்றி வெளியே சுற்றித் திரியக் கூடாது என கடுமையாக போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.