விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முஸ்டகுறிசி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கே முனியம்மாள் (45) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மதன்குமார் முத்துமணி என்ற 2 மகன்களும் ஜெயலலிதா என்ற மகளும் உள்ளனர். முனியம்மாளின் கணவர் முத்துசாமி என்பவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் முனியம்மாளின் தாயார் அடைக்கலம் (70) என்பவரை தனியாக வீடு அமைத்து பார்த்து வருகிறார். இரண்டு ஆண் மகன்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகள் ஜெயலலிதாவை கடந்த 2 மாத இரண்டு மாதங்களுக்கு முன்பு கிழவனேரி கிராமத்தில் முத்துக்குமார் என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. முனியம்மாள் எப்போதும் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் இருந்துள்ளது போல் தெரிந்தது.
வழக்கம்போல் அக்கம்பக்கத்தினர் முனியம்மாள் கடைக்கு பொருட்களை வாங்க செல்லும் போது கடை திறக்கவில்லை என்று வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். அப்போது முனியம்மாள் மகள் ஜெயலலிதாவும் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவருடைய தாயார் அடைக்கலம் வீட்டிற்கு சென்ற போதும் தாயார் அடைக்கலமும் இறந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விரைந்து வந்து முனியம்மாள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் கிடந்தது 2 பேரையும் பார்த்த போது அருகில் பூச்சி மருந்தும் குளிர்பானம் பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது.
போலீஸ் சார் விசாரணை செய்த போது நேற்று இரவு முனியம்மாள் வீட்டில் பருத்தி , கடலை போன்ற பயிர்களுக்கு அடைக்கும் பூச்சி மருந்தை குளிர்பானங்களில் கலந்து தன் தாயார் அடைக்கலம் மற்றும் தனக்கும் தன் மகள் ஜெயலலிதாவுக்கும் கலந்து கொடுத்து மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. தான் இறக்க முடிவு செய்தது போக தனது தாயார் அடைக்கலம் என்பவருக்கும் குளிர்பானம் கலந்த பூச்சி மருந்தை கொடுத்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வருகிறது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் வந்துள்ளது மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இறந்து கிடந்த 3 சடலத்தையும் உடற்கூறு செய்ய மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.