தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நயினார் நாகேந்திரனின் ட்விட்டர் பதிவில்:-
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனை படியும், என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை!! என்று தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.