தமிழக காவல்துறைக்கு 8930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இது குறித்து பட்ஜெட்டில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது,
நாட்டின் மிகத் திறமையான மற்றும் சிறப்பான காவல் படைகளில் ஒன்றாகத் திகழும் வகையில், தமிழக காவல்துறையின் தரத்தை மீட்டெடுப்பது இந்த அரசின் நோக்கம்.
மனிதவளம், வாகனங்கள், கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கட்டமைப்பு ஆகிய காவல்துறையின் தேவைகளை மாநில அரசு நிறைவு செய்யும், காவல்துறையில் ஒப்பளிக்கப்பட்ட 1, 33,198 பணியிடங்களில், மீதமுள்ள 14, 317 காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பெரும் குற்றங்களில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழிக் குற்றங்கள் பொருளாதாரக் குற்றங்களுக்கு உரிய தண்டனைகள் பெற்றுத்தரும் வகையில் விரைவாக விசாரணைகள் மேற்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். காவல்துறைக்கு மொத்தம் 8.930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.