தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரை:-
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒ.ராஜா தேனி மாவட்ட ஆவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னையில் இருந்து தேனி மாவட்டம் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொரோனா அச்சத்தால் போடி சுப்புராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். வழக்கமாக பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கும் அவர், இம்முறை போடியில் தங்கியுள்ளார்.
ஓ.பி.எஸ்.க்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.