தமிழகம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா உறுதி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் 87 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்:-

ALSO READ  நகைக்கடன் தள்ளுபடி....ஆவணங்களை சமர்ப்பிக்க அரசு உத்தரவு....

ஆளுநருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ராஜ்பவனில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ள ஆளுநரை அறிவுறுத்தியுள்ளோம். மேலும் காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இது வந்துவிட்டது அடுத்த வைரஸ்- கொசு, வவ்வாலை தொடர்ந்து நாய் வைரஸ் …!

naveen santhakumar

ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்!

Shanthi

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே அன்பழகனுக்கு கொரோனா…

naveen santhakumar