சென்னை:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு மே 17 வரை அமலில் உள்ளது. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை காவல்துறைக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பிற தனி கடைகள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும்.
சென்னை தவிர்த்து அனைத்து தமிழக பகுதிகளிலும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பிற தனி கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படலாம்.
மேலும், நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம்.
டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம்.
பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம்.
கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி.
34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு.
சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும்.