எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என இருந்ததை 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அறிவிப்புகளின் படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அறிக்கையின்படி 2021- 22 ஆம் கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டம் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத் தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை 8 லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் வீதம் ஆயிரத்து 600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் குறித்த ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழக அரசின் அரசாணையின்படி 2013 -14 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ள முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.