தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகளை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்க தமிழக தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, https://ethottam.com என்ற இணையதளத்தை தோட்டக்கலைத்துறை தொடங்கி உள்ளது.
இதில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களின் அளவை குறிப்பிட்டு ஆர்டர் செய்தால் நேரடியாக வீட்டிற்கே வந்து சேரும். ரூ.500, ரூ.600, ரூ.800 என மூன்று விலைகளில் பழங்களையும், காய்கறிகளை ரூ.300, ரூ.500, ரூ.600 என மூன்று விலைகளில் தொகுப்பாகவும் பெற்றுக்கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.