சென்னை:-
40 நாட்களுக்கு பிறகு தனது மகள்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
மேலும்,
நாற்பது நாட்கள்
தனித்திருந்தும்…
விலகியிருந்தும்…
கடமையாற்றி
களைத்து போகவில்லை நான்!
40 நாட்களுக்கு பின்
மகள்களை கண்ட புத்துணர்வுடன்
தொடர்ந்து களத்தில் !! என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் இரவு, பகலாக பம்பரமாக சுழன்று வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். மருத்துவமனைகளுக்கு செல்வது, மருத்துவர்களின் உரையாடுவது, செய்தியாளர்கள் சந்திப்பு, உடனுக்குடன் தகவல்களை அது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்வது என பரபரப்பாக பணியாற்றி வருகிறார். இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரிதன்யா பிரியதர்ஷினி மற்றும் அனன்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். பணிச்சுமை காரணமாக தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் இருந்த விஜயபாஸ்கர் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ரிதன்யா பிரியதர்ஷினி கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடன வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், இந்த கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறார் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் அவரது செயல்பாடுகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.