கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் – கர்காடகம், தமிழகம் – ஆந்திரா இடையே அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.
எனினும், கேரளாவில் தொற்று அதிகரித்து வந்ததால், தமிழகம் – கேரளா இடையே அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்படவில்லை.
இந்நிலையில், 23 மாதங்களுக்கு பிறகு ‘தமிழகம் – கேரளா இடையே பொது போக்குவரத்து துவங்கப்படும்’ என, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, அறிவித்தார்.
இதன்படி கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 10 தமிழக அரசு பேருந்துகள் பாலக்காட்டிற்கும், பாலக்காட்டிலிருந்து கோவைக்கு 10 கேரளா மாநில பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து, கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரிக்கு இன்று, காலை முதல் அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.
அதே போன்று கேரளா மலப்புரம் மாவட்டம், பெருந்தல்மன்னாவிலிருந்து கூடலூருக்கு கேரளா அரசு பஸ் போக்குவரத்தும் துவங்கப்பட்டது.