தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை விட 54 சதவீதம் அதிகமாகவும், சென்னையில் வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை எப்போதும் தமிழ்நாட்டிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் வடகிழக்குப் பருவமழை அதிக மழைபொழிவை கொடுக்கும்.
இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் இதுவரை 20 செ.மீ.க்கு பதில் 39 செ.மீ மழை பதிவானது. இது இயல்பை விட 54% அதிகமாகும். சென்னையில் அக்டோபர் 1 முதல் இதுவரை 23 செ.மீ.க்கு பதில் 47 செ.மீ மழை பதிவானது. இது இயல்பைவிட 77% அதிகமாகும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மதியம் 4 மணி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மட்டுமல்லாது தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. கனமழை காரணமாக விவசாய பயிர்களை மூழ்கடித்துள்ளது. இவையனைத்தும் வழக்கத்திற்கு மாறாக இயல்பை தாண்டிய மழையால் நடந்த விபரீதங்கள்.