சென்னை:
TNPSC வெளியிட்ட அறிவிப்பின்படி ஏற்கனவே, தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனது நிரந்தரப்பதிவுடன் தங்களது ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தரப்பதிவிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் ஆதார் சட்டம் 2016ன்படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்படாது. மேலும் ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தரப்பதிவில் இணைப்பதற்கான வழிமுறைகள், அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி குறித்தான விவரங்கள் யாவும் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpscexams.inல் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்தான பின்னூட்டத்தினை அளிக்கவும் அந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஆகையால் தேர்வாணையத்தின் நிரந்தரப்பதிவு எண்ணை வைத்திருக்கும் தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.