தமிழகம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகள் வெளியீடு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அறிவுரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. 20-09-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட 201 பக்கங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • விண்ணப்பதாரர் www.tnpscexams.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  •  ஒரு முறைப்பதிவு என்பது பதிவுசெய்த நாள் முதல் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதுமுடிந்த பின்னர், விண்ணப்பதாரர் ஒருமுறை பதிவினை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினை செலுத்தி கட்டாயம் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
  • ஒருமுறைப் பதிவிற்கு பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண் கட்டாயம் ஆகும்.
  • தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட அன்றோ,அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையவழியில் ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போதும் விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இணையவழி விண்ணப்பத்தினை சமர்பித்து பின்னர், விண்ணப்பதாரர் தமது புகைப்படம் மற்றும் கையெழுத்தினை மாற்ற இயலாது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவற்றை பதிவேற்றம் செய்ய எச்சரிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் வழியில் விண்ணப்பித்த பிறகு, இதுதொடர்பான எந்தவித கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • தேர்வு கட்டண சலுகையை பொறுத்தவரையில், எஸ்.சி., எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீரமரபினர், முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 3 முறையும், முன்னாள் ராணுவத்தினர் 2 முறையும் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • சாதி சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், முன்னாள் ராணு வீரருக்கான சான்றிதழ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சான்றிதழ், தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றை போலியாக சமர்ப்பித்தல், ஆவணங்கள் அல்லது சான்றிதழ்களில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சேதங்களை ஏற்படுத்தி இருந்தால் அந்த தேர்வர் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படுவதோடு, அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
  • தேர்வு மையத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வரத்தவறியவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • கொள்குறி வகை வினாத்தாளில் தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற மை கொண்ட பந்துமுனை பேனாவை தவிர வேறு பேனாவை பயன்படுத்துவது, இணையவழி விண்ணப்பத்தில் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடத்தில் தேர்வு எழுதாமல் வேறு பாடத்தில் மாற்றி தேர்வு எழுதுவது, ஓ.எம்.ஆர். விடைத்தாளை முறையாக நிரப்பாமல் இருத்தல் போன்றவற்றால் தேர்வரின் விடைத்தாள் செல்லாததாக கருதப்படும்.
  • தேர்வு மையத்துக்கு வரும்போது ஹால்டிக்கெட் கண்டிப்பாக கொண்டுவருவதுடன், ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை கொண்டுவர வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு , தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டு www.tnpscexams.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டு தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ALSO READ  டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. பழைய 30% இட ஒதுக்கீடு மட்டுமே திருத்தியமைக்கப்பட்ட அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகம் வந்த ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.. இதில் என்ன ஸ்பெஷல்…?

naveen santhakumar

ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள்:

naveen santhakumar

கோவில் பிரசாதங்கள் தயாரிப்பில் அதிரடி மாற்றம்!

naveen santhakumar