சென்னை:-
அரசுப்பணிகளில் பெண்களுக்கான உள் இடஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்,
அவையாவன, தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும்.
தமிழ் தகுதித்தேர்வாக சேர்க்கப்படுவதால் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு இதன் மூலம் உறுதிப்படுவதாக கூறப்படுகிறது.
அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதுபோன்று அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%லிருந்து 40%ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.