தமிழகம்

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; மேடை நடன கலைத்துறையினர் சார்பில் மனு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை மாவட்ட மேடை நடன கலை துறை நலச்சங்கமானது, கோவை நீலிகோணம்பாளையம் பகுதியில்  செயல்பட்டு வருகின்றது, இதன் தலைவர் சண்முகம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, புகார் மனு ஒன்றை அளித்தனர் அதில்,  கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக போடப்பட்டுள்ள, கொரோனா ஊரடங்கு காரணமாக, எங்களது சங்கத்தின் உறுப்பினர்களை காக்கவும் மேடை கலையை மீட்டெடுக்கவும், ஐந்து கோரிக்கைகளை  செய்து தர வேண்டும்.

ALSO READ  ”நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்”: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

கோவை மாவட்டம் முழுவதும், சங்கத்தில் பதிவு செய்த, குழுக்களுக்கு அமைதியாக நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலைஞர்கள் அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். அரசின் இரண்டாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பால் இரண்டு வருடமாக வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் கோவை மாவட்ட கலைஞர்களுக்கு வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்க வேண்டும். 


இந்த கடனை வழக்கம்போல நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்த பின்பு திருப்பி செலுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் எனவும், கலைஞர்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக குறைந்தபட்சம் 5 ஆயிரம், மாதம் ஊக்கத்தொகை  வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ம் ஆண்டிலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்பதை உறுதி செய்வோம்

Admin

ஆதரவற்ற குழந்தைகளின் படிப்புக்காக கழிவறையை சுத்தம் செய்யும் மனிதர்….

naveen santhakumar

உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

Admin