தமிழகம்

தனியார் பள்ளி திடீர் மூடல்… 7 மாணவர்களுக்கு தொற்று உறுதி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேருக்கு கடந்த வாரம் காய்ச்சல், சளித் தொல்லை இருந்துள்ளது. இதனையடுத்து பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 7 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பள்ளிக்கு டிச.25-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், பள்ளியில் உள்ள பிற மாணவ- மாணவிகள் 600 பேருக்கு மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் இன்று பள்ளி வளாகத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ALSO READ  மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி !

இதேபோல், சீராத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாணவி பயிலும் வகுப்புக்கு மட்டும் டிச.23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

News Editor

ஆதார் கார்டு ஜெராக்ஸ்-ல தான் பஜ்ஜி மடிச்சு கொடுப்பார்களாம்..என்னடா நடக்குது இங்க..

Admin

சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை…!

News Editor