தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்த இவர் திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது. அதே கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஞானராஜ்(45). இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இருவரும் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வைகை அணை பகுதியில் உள்ள பழைய பாலம் அடியில் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்தவர்கள் வைகை அணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் நேற்று மாலை இருவரையும் தேடி வந்தனர். இரவு நேரம் தேட முடியாது என்பதால், மீண்டும் இன்று காலை 6 மணி முதல் தேடி வந்தனர்.
சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் இருவரின் உடலையும் மீட்டனர். இருவரின் உடலையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.