தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோன தடுப்பு அவசர உதவி மையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனும் உடனிருந்தார்.
இன்று மாலை திடீரென சென்னை டிஎம்எஸ் வளாகத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் 108 அவசர ஊர்தி செயல்பாடுகள் குறித்து தகவல்களை கேட்டறிந்தார்.
மேலும் அவசர ஊர்திக்கான அழைப்புகளை கையாளும் பகுதிக்கு சென்ற அவர் மக்களின் அவசர உதவி அழைப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்றும், அவசர ஊர்தி சேவைகள் போதுமானதாக உள்ளதாக என்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.