திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று திண்டுக்கல் மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருவாரியான மக்கள் கொரோனா அச்சம் காரணமாக முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை.
தற்போது கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த தொற்று பரவிவிட்டது.
அதேசமயம், மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது திண்டுக்கல் மாநகராட்சி திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது.