தமிழகம்

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கடந்த மாத இறுதியில் வழக்கமான சிகிச்சைக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருந்ததாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ALSO READ  தமிழகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி:

அதன் முடிவில், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததால், அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த்தின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறப்பதற்கு முன்பே தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபர்:

naveen santhakumar

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

News Editor

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்?

Shanthi