தருமபுரிமவட்டம். பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 17வது வார்டு நீர் குந்தி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மோகன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழிப்பண்ணையில் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை கோழிப்பண்ணையில் தீவனம் மூட்டைகளை கனரக வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அருகில் இருந்த மின்சாரக் கம்பியில் மிதித்து விட்டார். இதனை கண்ட சக ஊழியர்கள் கோழிப் பண்ணையில் உள்ள மின்மாற்றியின் இணைப்பை துண்டித்தனர். இதில் மின்சாரம் தூக்கி எறிந்த நிலையில் மோகன் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீசார் நிகழ்வு இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உறவினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.