ராமநாதபுரம் அருகே தன்னைக் கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி கூலித் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியை அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சேர்ந்தவர் சேது இவர் வீட்டின் முன்பு மயங்கி விழுந்து கிடந்த பாம்பை அப்புறப்படுத்துவதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சேதுவின் கையில் சுற்றிக் கொண்டு அந்தப் பாம்பு கடித்துள்ளது. வலியால் துடித்த சேதுவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .அங்கு சிகிச்சை பெறும் போது மருத்துவர்கள்,உங்களை எந்த பாம்பு கடித்தது என்று கேட்டபோது,தான் வைத்திருந்த பையில் இருந்து சுமார் 3 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பை வெளியே எடுத்துள்ளார் .
இதனால் அங்கிருந்த மருத்துவர்கள் நோயாளிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் .இதனை தொடர்ந்து சேது கொண்டு வந்த பாம்புக்கு உயிர் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களுக்கு நிம்மதி வந்தது. பின்பு சேதுவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மேலும் கடித்த பாம்பை உடன் எடுத்துவர தேவையில்லை என சேதுவுக்கு அறிவுரை வழங்கி மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.