தமிழகம்

மதுரையில் கொடூரம்…..இளைஞர் தலையை வெட்டி தேவாலயத்தின் முன்பு வைத்த கும்பல்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:

இரண்டு இளைஞர்களை ஓட ஓட விரட்டி துடிதுடிக்க கொன்ற சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரையில் செயின்ட் மேரீஸ் சர்ச் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மர்ம கும்பல் ஒன்று வேகமாக வந்து வழிமறித்து சரமாரியாக வெட்டியது. அந்த கும்பலிடமிருந்து தப்பி ஓட நினைத்த,இளைஞர்களை அவர்கள் விடாமல் துரத்தி வெட்டினர். இதை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட சத்தம் கேட்டு அருகில் இருந்த காவலர்கள் ஓடி வந்தனர். 

ALSO READ  திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா...

அதற்குள் இளைஞர் ஒருவரின் தலையை தனியாக எடுத்து சென்று செயின்ட் மேரீஸ் தேவாலயம் முன்பு வைத்து விட்டு மர்ம கும்பல் தப்பியது.இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அத்துடன் அங்கு கிடந்த கத்தி உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர், ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அதேபோல் படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞர், கீழ்மதுரையை சேர்ந்த முனியசாமி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; போராட்டத்தில் குதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் !

மதுரையில் பரபரப்பு மிகுந்த சாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு தலை சர்ச் வாசலில் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

naveen santhakumar

வங்கி ஊழியர்கள் திட்டியதால் விவசாயி தற்கொலை…!

News Editor

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் கிராமதினர் எதிர்ப்பு… தாயாரின் விபரீத முடிவு…

naveen santhakumar