தனது புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்து சந்தையை அதிர வைத்துள்ளது பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் விமான எஞ்சின்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமுமான ரோல்ஸ் ராய்ஸ்.
ACCEL – என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த மின்சார விமானத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 250 வீடுகளுக்கு மின்வசதி கொடுக்கும் அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதால், ஒருமுறை முழுவதும் மின்சாரம் ஏற்றப்பட்டால் 321 கிலோ மீட்டர்கள் தூரத்தை இந்த விமானத்தால் கடக்க முடியும்.
இந்த விமானத்தில் மூன்று எடை குறைவான மின்சார மோட்டார்கள் உள்ளன. இவற்றின் மூலம் மணிக்கு 480 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இதுவே மின்சார விமானத்தின் மிக அதிக வேகமாக உள்ளது.
இந்த விமானத்தை இங்கிலாந்து அரசாங்கத்தின் நிதி உதவியோடும், YASA, Electroflight – ஆகிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலோசனைகளோடும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது.