ஸ்மார்ட்போன்கள் கழிவறைகளை விட அசுத்தங்கள் நிறைந்தது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் சார்லஸ் ஜெர்பாவின் குழு ஸ்மார்ட்போன்கள் வழியாக பரவும் நோய்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இதில் வெளியான முடிவுகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வில் 25 ஸ்மார்ட்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 50 சதவீதம் அளவு, அதாவது 25க்கும் அதிகமான கிருமிகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது கணிகளில் உள்ள கிருமிகளின் (20 ஆயிரம்) அளவை விட அதிகம் எனவும், சாதாரண கழிவறைகளில் கூட (49 கிருமிகள்) தான் இருக்கும் என்பதால் இது மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன்களை நாம் எப்போதும் சுத்தமாக வைத்தி கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களின் போன்களை நாம் அதிகமாக உபயோகிக்கவும், நம் போன்களை மற்றவர்கள் உபயோகிக்கவும் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.
இதனால் ஸ்மார்ட்போன்கள் என்னும் நோய் கிருமிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்…!