தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.
ட்ராய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ளி ஏர்டெல் நிறுவனம் தொடர்ச்சியாக 4 மாத காலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றது.
அதனையடுத்து ஜியோ நிறுவனம் 19 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது. இந்த காலகட்டத்தில் வோடாபோன் நிறுவனம் தனது 29 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இருப்பினும் இந்திய டெலிகாம் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலை தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.