மத்திரபிரதேசத்தில் பசுக்களின் நலனை கருத்தில் கொண்டு அவற்றை இணையுடன் சேர்க்க மேட்ரிமோனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட உத்திரப்பிரதேசத்தில் மாடுகளுக்கு குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள ஒரு கம்பளி போர்வை வழங்குவதற்காக கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வகையில் இன்னும் ஒரு படி மேலே போய் ம பசுக்களுக்காக மேட்ரிமோனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய பிரதேச மாநிலத்தின் கால்நடை துறை சார்பில் பிரத்யேக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. www.cssbhopal.com என்கிற அந்த இணையதளத்தில் காளைகளின் புகைப்படத்துடன், குறியீட்டு எண், அவற்றின் இனம் உள்ளிட்ட இதர பல விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் பயன்படுத்தி தங்களுடைய பசுக்களுக்கு ஏற்ற இணை காளைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.