இந்திய பைக் வீக் திருவிழா தொடக்கம்
இந்திய பைக் பிரியர்களின் ஆவலை ஏற்படுத்திய இந்திய பைக் வீக் திருவிழா கோவாவில் கோலாகலமாக நேற்று தொடங்கியது.
கோவாவிலுள்ள வடகர் பகுதியில் இந்த திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பைக் உரிமையாளர்கள் தங்களது பைக்குகளில் பயணித்து வந்து கோவாவில் முற்றுகையிட்டு இருக்கின்றனர்.
இந்தியாவிலுள்ள பைக் உரிமையாளர்கள் மற்றும் பைக் பிரியர்களை ஒன்றிணைக்கும் விதமாக துவங்கப்பட்ட இந்த திருவிழா தற்போது பெரிய பைக் நிறுவனங்கள் பங்கேற்கும் அளவுக்கு பெரிய அளவிலான திருவிழாவாக மாறி இருக்கிறது.
இத்தாலியில் மாபெரும் பைக் திருவிழாவாக இந்திய பைக் வீக் திருவிழா மாறி இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு இந்த திருவிழாவின் உற்சாகம் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.