தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுவதால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சீசன் மாதங்களாகும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து துவங்கி சீசன் ஆரம்பமாகியுள்ளது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் சிற்றருவி ,புலியருவி உள்ளிட்டவற்றில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.இந்நிலையில் நேற்று மாலை முதல் குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த சாரல் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளைவை தாண்டி அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.