சீனாவில் அதிர்ஷ்ட நாளாக கருதப்படும் இன்றைய தினம் நடைபெறவிருந்த திருமண நிகழ்வுகளை ரத்து செய்ய அந்நாட்டு அரசு முடிவு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதலை உலக நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
சொந்த நாடு திரும்பும் மக்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்.
சீனாவில் 2020ம் ஆண்டின் அதிர்ஷ்ட நாளாக பிப்ரவரி 2ம் தேதி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் குடியுரிமை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், இந்தநாளில் திருமணம் செய்ய ஏராளமான மணமக்கள் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த தேதியில் திருமணத்தை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இறுதிச்சடங்குகளை அதிக கூட்டம் சேராமல் விரைந்து முடிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனமக்கள் இன்னும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.