உலகம்

இலங்கையில் 5000க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி கின்னஸ் சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கையில் ஒரே இடத்தில் அதிகளவில் இரட்டையர்கள் ஒன்றுகூடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சுகததாச மைதானத்தில் நடைபெற்ற இந்த இரட்டையர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் நினைத்ததை விடவும் அதிகளவில் இரட்டையர்கள், மூவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ  இலங்கை பள்ளி மாணவர்களுக்கு சீன அதிபரின் மனைவி எழுதிய பதில் கடிதம்......

ஆனால் இங்கு வந்திருந்த இரட்டையர்கள், மூவர்கள் ஆகியோரின் ஆவணங்களை சரிபார்த்து விவரங்களை சேகரிப்பதற்குள் பலர் பொறுமை இழந்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.இதனால் இந்த கின்னஸ் சாதனை முயற்சி வெற்றி அடைந்ததா என்பது குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தைவானில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இதுபோன்ற இரட்டையர்கள் கூடும் நிகழ்ச்சியில் 3961ஜோடி இரட்டையர்களும், 37 ஜோடி மூவர்களும், 4 ஜோடி நால்வர்களும் பங்கேற்று உலக சாதனை படைத்தனர். அதனை முறியடிக்கும் வகையில் இலங்கையில் இத்தகைய நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலாஹாரிஸ் வருகைக்காக இந்திய மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் – பிரதமர் மோடி

News Editor

இன்று முதல் அமெரிக்க  மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது…..

News Editor

தீயணைப்பு வீரரின் இறுதிசடங்கில் மனதை நிலைகுலைய வைத்த சிறுமி

Admin