தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இலங்கையில் 2015-ம் ஆண்டு சிறுபான்மையினரான தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன், தமிழில் பாடுவதையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து 2016-ம் ஆண்டு முதல் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டு வந்தது.
தமிழ் தேசிய கீதம் சேர்க்கப்பட்டபோது தமிழ் சமுதாயத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சி இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என வழக்கு தொடுத்தது.
இதுகுறித்து உள்துறை மந்திரி மஹிந்த சமரசிங்கே கூறும்போது,
‘‘சுதந்திர தின முக்கிய விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், மாகாணங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ் பாடலும் அனுமதிக்கப்படும்’’ என்றார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.