மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சீன பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சரை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா என்பவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படித்துள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து , நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் திடீரென கொரானா வைரஸ் பரவ தொடங்கி, பல நாடுகளையும் உலுக்கு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் இரு பக்கம் இருந்தாலும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த மணப்பெண் வீட்டார் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மணப்பெண்ணும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாண்ட்ஸர் வந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் இவர்களுக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டு, இருவருக்கும் திருமணம் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடதக்கது.