இந்தி பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளரான நடிகை கவுஹர் கான் பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது . அவரும் சில நாட்கள் தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் அவர் திடீரென15 நாட்கள் தலைமை படுத்துதல் முடிவடைவதற்கு முன்பாகவே கரோனா தொற்றை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை கவுஹர் கானின் இந்த பொறுப்பற்ற செயலை கண்டித்துள்ள சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு, அவர் அடுத்த 60 நாட்களுக்கு படங்களில் நடிக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
The post கொரோனாவால் பாதித்த நடிகை படப்பிடிப்பிற்கு சென்றதால் அதிர்ச்சி ! appeared first on Tamil Thisai.