இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். அதனையடுத்து மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குடியரசு தலைவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசு தலைவர் மற்றும் பல மாநில முதல்வர்கள், தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். அவர்களை தொடர்ந்து பல பிரபலங்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘தாமதிக்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல இசையமைப்பாளர் ! appeared first on Tamil Thisai.