சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 6000க்கும் மேற்பட்ட மக்கள் நோய் அறிகுறிகளுடன் தீவிர மருத்துவ பராமரிப்பில் உள்ளனர்.
லகின் பல நாடுகளும் சீனாவின் இத்தகைய நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, கொரோனா வைரஸ்க்கான மருந்தை உருவாக்க சீனா மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் அமைப்பிற்கு 11மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
மேலும் ஜாக் மா, ஏற்கனவே மக்களின் மருத்துவ வசதிக்காக 110மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மேலும் சீனாவில் செயல்படும் 150நிறுவனங்கள் கொரோனாவை சமாளிக்கும் பொருட்டு இதுவரை 499 மில்லியன் பவுண்டுகளை ஜாக்மா நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சீன நிபுணர்கள் கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தை அடையாளம் காணும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.